பிரியா எழுதியவை | மே 24, 2007

இரும்பு அதை நீ விரும்பு

தொகுப்பு : கணேஷ் மரியதாஸ்

சோர்வாகவும், தளர்ச்சியாகவும் காணப்படுவோர் பலரை சோதித்துப் பார்த்தால், ரத்த சோகை பீடித்திருக்க வாய்ப்பு உள்ளது. குறைந்த பட்சம் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு ஆண்களுக்கு 13.5 – 14 அலகுகளாகவும், பெண்களுக்கு 12 அலகுகளாகவும் வரையறை செய்யப்பட்டிருக்கிறது.இது குறைகிற போது அனீமிக் பிரச்சனை – ரத்த சோகை ஏற்பட்டு விடுகிறது.

ஹீமோகுளோபின் மிகமிகக் குறைந்து விட்டால் நடக்க கூட முடியாத தளர்ச்சி கூட ஏற்பட்டு விடும். எதிர்ப்பணர்ச்சி குறைந்து நோயகள் தாக்க ஏதுவாகும். ரத்த சோகையுள்ளவர்கள் நிறைய சத்தான உணவை உட்கொள்ள் வேண்டுமென்றால், உண்வின் மீது சலிப்புத்தான் தோன்றும். உணவில் கலந்துள்ள இரும்புச் சத்தை உள்வாங்கிக் கொள்ள கூட ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிரமமாக இருக்கும்.

இரும்புச் சத்து குறைவதால் தான் ரத்த சோகை வருகிறது. வற்றில் பூச்சி இருப்பதாலும் கூட இது வரக் கூடும்.ரத்த சோகைக்கு ஒரு காரணம் மன சோர்வும், மன அழுத்தமும் கூட. இரும்பு பொருட்கள் உபயோகம் ஓரளவு இரும்புத்தேவையை ஈடு செய்கிறது.ஆனால் இன்றைய நாகரீக வாழ்வு இரும்பு உபயோகத்தை சரித்திரத்தின் பக்கத்தில் வைத்துவிட்டது.

ஒட்டாத தோசைக்கல், இரும்பு கத்தி இருந்த இடத்தில் எவர் சில்வர் கத்தி இவற்றையெல்லாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். ரத்த சோகையைத் தவிர்ப்பது முக்கியமானது. இரும்பு மனிதராக நாம் எல்லோர்க்கும் சிம்ம சொப்பனமாக இருக்க வேண்டாம். ஆனால் இரும்பே அற்ற மனிதராகவும் இருந்து விடக்கூடாது

(மூலம் – வெப்துனியா)


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

வகைகள்

Follow

Get every new post delivered to your Inbox.